Sunday, February 21, 2010

என்ன நியாயம்

கழுத்து நெறிக்கப்பட்ட
கோழியின்
கதறலைக்
கண்டிருக்கின்றேன்

வெட்டப்பட்ட
மாட்டின் பீரீட்ட
இரத்தத்தையும்
அப்போது
அதன் கண்களில்
தெறியும்
மிரட்சியையும் பார்த்திருக்கின்றேன்

பூனையால்
பிடிபட்ட எலியின்
தப்பிப்பதற்கான
இறுதி முயற்சியையும்
கண்ணுற்றிறுக்கின்றேன்

இவைகள்
நடப்பதெல்லாம்
இருந்துவிட்டுத்தான்

ஒரு மனிதனின்
சாவுக்குப் போராடும்
அந்த
கணத்த கணங்கள்
இப்போதெல்லாம்
நாள்தோறும் தென்படுகின்றன

ஒரு
கீரைக்கடையில் விற்கப்படும்
கீரையின்
விலையை விட
மனித உயிர்
இழித்துப் போய்விட்டது

மனிதர்களுக்காக
போராடுகிறோம்
என்று
சொல்லிக்கொண்டு
மனிதனை மாய்த்து வருவது
என்ன தர்மம்?

ஒரு பள்ளியின்
கூரையின் கீழ்
நூற்றுக்கணக்கானவர்களின்
உயிர்களை
மனசாட்சியில்லாமல்
பறித்தவர்களால்
எப்படி இரவில்
உறங்க முடிகிறது

ஒரு சமூகத்தின்
தலைகளை
கொய்து
தன் சமூகத்தின்
அஸ்திவாரங்களாக்குவது
எங்கிருந்து பெற்ற நியாயம்?

எதனையும்
எப்படியும்
அடையலாம்
என்பதானது
அவர்களுக்கு
அவர்களே தோண்டிக்கொள்ளும் குழி

No comments:

Post a Comment