Thursday, February 18, 2010

எப்போது நீ பிறப்பாய் ?

எங்கு தூர்ந்தன
எமது இருப்பு ?
எப்போதிலிருந்து ஆரம்பித்தன
எமது
இருண்ட காலம்!!
எமக்குள் ஏன்
இத்தனை முட்டாள்தனங்கள் ?
எமது மூலத்தை மறந்த
பயணம்
எது மட்டும் ?
நிஜத்தை தொலைத்த
எமக்குள்
எத்தனை போலித்தனங்கள் ?
எம் மூளையை
ஏன் மேற்கத்தியர்களிடம்
அடகுவைத்தோம் ?
எம் சுதந்திரத்தைக் கூட
ஏன் அவர்களிடம்
இறைஞ்சுகிறோம் ?
மோக மயக்கத்தில்
மயக்கி மயக்கியே
எமது முதுகெழும்பை
உடைத்து விட்டனர்.
அற்ப இன்பத்தின் சுவையை
பெரு மகிழ்வாக
எமக்குள்
பதித்து விட்டார்கள்
அறிவியலின்
அடிப்படையே நாங்களென்று
எங்களை நம்பவைத்துவிட்டார்கள்
ஒரு சூனிய அகலத்தில் தள்ளி
வெளிவராமல்
தக்க தந்திர அடைப்பு
செய்துகொண்டிருக்கிறார்கள்
எதற்கு
நாம் இருக்கிறோம்
என்பதையே எமக்குள்
மறைத்து விட்டார்கள்
நவீன உமர் இப்னு அப்துல் அஸீஸே !!
எப்போது
நீ பிறப்பாய் ??

No comments:

Post a Comment