Friday, February 19, 2010

பயனம்

ஒரு இருண்ட வனத்தின்
கருமையில்
என் கண்களை
பழக்கப்படுத்திக்கொண்டிருக்கின்றேன்

இரவைக் கிழித்துவரும்
சப்த்தக் கடாட்சம்
என்னை
பயமுறுத்தினாலும்
மனத்தை திடப்படுத்தி
முன்னேறிக்கொண்டிருக்கின்றேன்

கால்களின்
அடிகளைக்கூட
கவனமாக வைக்கிறேன்

என்னைச் சூழ்ந்து திரியும்
மின்மினிப் பூச்சிகளை
என் பாதை தேடலுக்கான
மின்விளக்காக்கிக் கொள்கிறேன்

கால் இடறி விழுந்த
சந்தர்ப்பங்களில்
என்னில் நானே
நொந்து கொண்டு
என்னை நானே
திடப்படுத்திக்கொள்கிறேன்

காட்டு மிருகங்களின்
கண்களில் பட்டு விடாமல்
வளர்ந்திருக்கும்
முட்களில் தைத்து விடாமல்
என் பயன‌த்தை
தொடர்ந்துகொண்டிருக்கின்றேன்

கிராமம்
தூரத்தில் இருக்கும்
என்ற நம்பிக்கையே
என் இப்போதைய பலம்

மிருகத்தை பிடிக்கும்
பொறிகளில் சிக்கிவிடாமல்
ஆளை விழுங்கும்
குழிகளில்
விழுந்து விடாமல்
இருளை
கிழித்துப் பார்த்து பார்த்து நடக்கின்றேன்

1 comment:

  1. Assalamun alaikum
    I have downloaded all this and I will read it and make all the corrections and will send soon via your email.
    thank you

    UK ABDUR RAHEEM

    ReplyDelete