Tuesday, March 9, 2010

இசை

எங்களில்
இன்பம் கொட்டு

உன்
எண்ணெய்
தடவிய
இறகால்
எங்கள் மனசு தடவு

எங்கள்
நரம்புகளில் ஒட்டியிருக்கும்
கறை கழுவு

உள்ளுக்குள்
முரண்டு பிடிக்கும்
மிருகமடக்கு

மென்மையை
ஊற்றி
இதயம் கழுவு

மனித
வார்த்தைகளால்
புண் படும் போது

ஒலிவொயிலாகு
உலக மாந்தர்
இறுகும் போது
இளக விடு

வாழ்க்கை
வழிந்தோடும் போது
இருக விடு

விடிகாலை
பறவைகளின் சங்கீதம்

விடிந்ததும்
கண்விழிக்கும்
குழந்தைகளின் சங்கீதம்

பூக்களின்
சிணுங்கள் சங்கீதம்

சாலைகளில்
சனங்களின்
சலசலப்பூ சங்கீதம்

இரவின்
இடுப்பில்
உறங்கும்
அமைதிச் சங்கீதம்

இசையே நீ
எதற்குள்
கருவிருந்தாய்?

No comments:

Post a Comment