Wednesday, July 13, 2011

Friday, June 3, 2011

Saturday, May 28, 2011

தவ்ஹீத் ஜமாத்

10 வருடங்களுக்கு முன்பு எமது ஊர் ஓர் ஆன்மீக பூமியாக மிளிர்ந்தது.எமது ஊர் ஒரு தலைவரின் கட்டுக்கோப்புக்குள் அடங்கிக்கிடந்தது.உள மகிழ்வோடுதான் அனைவரும் அவரைப் பின்பற்றினர்.இப்படியிருக்கும் போதுதான் தவ்ஹீத் ஜமாத் எமது ஊருக்குள் நுளைந்தது.அப்போது அதனை நாம் எமது ஊருக்குகிடைத்திருக்கும் வரம் என்றுதான் எண்ணியிருதோம் . அதற்காக எமது உழைப்பு , பணம் ,நேரம் அனைத்தையும் தியாகம் செய்தோம். நிறைய உலமாக்கள் வந்தார்கள்.அவர்களின் பேச்சில் தெரிக்கும் அனல்வர்த்தைகளில் சொக்கிப்போனோம்.
நாட்களும் கடந்தது . புதிய அலையொன்று வீசத்தொடங்கியது...ஒரு பள்ளி கட்டவேண்டும்....பள்ளியும் கட்டி முடிக்கபட்டது....
உலமாக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள்....ஒன்று புரிபட்த்துவங்கிய்து....ஒவ்வரு உலமாவும் ஒவ்வொரு தான் நினைத்த, தான் வாசித்த கருத்துக்களை சொல்லிவிட்டு போனார்கள்.பொது மக்களின் பாடுதான் திண்டாட்டமாக இருந்தது.....கொஞ்ச நாளில் புரிந்து போனது .தலைவரில்லாத,
யாருக்கும் கட்டுபடபிடிக்காத கூட்டம் இது என்று.இவ்வளவுக்குள்ளும் எமது ஊரில் ஒன்று நடந்து முடிந்துவிட்டிருந்தது. அது தான் ரஷ்யா மாதிரி பல பிரிவுகளாக பிளவு பட்டு போயிருந்தது.....அல்லாதான் அனைத்தும் அறிந்தவன்

Saturday, May 7, 2011

வான் முட்டும் கனவுக்கங்கள்



தூங்கும் விழிகளில்
கனவுப் பூக்கள்

அமைதி கொண்ட
நெஞ்சமதில்
அலை அலையாய்
இறந்தகால
நிஜங்கள்.

ஓ.....
இனிமையான் காற்றுக்கள்
பளிச்சிடும் வதனங்கள்
புள்ளாங்குழல் வாசிக்கும்
குயில்கள்.

ஒரு நிகழ்வு
ஒரு வார்த்தை
மனிதரில்
பல மாற்றாங்களை
கொண்டுவரலாம்

பிரார்த்தனை

Friday, April 29, 2011

ஜன்னல் மலர்



அவள்
வயதுக்கு
வந்திருந்தாள்.
ஆயிரத்தெட்டு
கனவுகளை
அவள் உள்ளம்
சுமந்து நின்றது.

தன்
சங்கம நாளை
பூரிப்போடு
எதிர்பார்த்திருந்தாள்.
மாததிற்கு ஒரு நாள்
வரும்
பௌர்ணமி போல்.

அவள் வீட்டு
ஜன்னலில்
இருந்து விட்டு
முகம் காட்டுவாள்.

நாட்கள்
மாதங்களில் ஏற
வருடங்கள் ஓட
அவளுக்கு
வயதும்
ஏறிச்சென்றன...

ஜன்னலூடாக
இருந்திருந்து
தோன்றிய- அவள் முகம்
நாள்தோறும்
புஸ்பிக்கத்தொடங்கியது.

தந்தையின் இயலாமை
தாயின் பெருமூச்சு
கலியாணம் அவளுக்கு
ஒரு
கனவாக மட்டுமே இருந்தது.

கொன்சநாளாக
அவள்
ஜன்னல்
கம்பியாகவே
மறியிருந்தாள்.

அந்த
ஜன்னல் முகத்தில்
சமூகத்தை
சுட்டெரிக்கும்
நெருப்பு
சாவகாசமாய்
எரிந்துகொண்டிருந்தது.

ஆண்களுக்கு
இரத்தமில்லை
கல்யாண வயதானதும்
சீதனத்தால்
இரத்தமேற்றப்படுகிறார்கள்

கலியான ராமர்களுக்காக
சீதைகள் இங்கு
வில்
உடைத்துகொண்டிருக்கிறார்கள்.

பணத்தைக் கொடுத்து
பெண்ணையும் கொடுக்கும்
கல்யாணம்
வித்யாசமான
ஒரு வியாபாரம்....

Monday, April 25, 2011

இந்த பூமிப்பந்தை உள்ளங்கய்க்குள் அடக்கும் திரவக் கவிதயை யார் பாடப்போகிறீர்கள் ?

சிகரம் தொடுவோம்



காலக் காற்றில்
புதர்களாய்
அடித்து
செல்லப்பட்ட
எமது ஆசைகளை
இருட்டில் தேடிக்கொண்டிருக்கிறோம்.

சரித்திர சூறாவளிகள்
எமது சமுதாய கல்வியை
துவம்சம் செய்து விட்டன.

விடியும் எதிர்காலம்
எம்மை
சிகரத்தில்
உயர்த்தவேண்டும்.
எம் மக்களின்
அறிவு
சுடர்விடவேண்டும்.

அடர்ந்த காடு
தீப்பற்றிவிட்டது
அந்த சாம்பளை
பசளையாக கொண்டு
நாம் முளைத்திடுவோம்.

அறியாமை
சமூகம்
என்ற கருப்பு முகம்
துடைக்கப்பட்டு
இரவு விடிவெள்ளியாய்
வளம்
வருவோம்.

வியாபார வில்ங்குகளிலிருந்து
விடுபட்டு
பூமியின்
அரசர்களாய்
ஆகிிடுவோம்.

சூன்யமாகிப் போனது
எமது எதிர்காலம்
அறிவு சுமந்த
முன்மாதிரியை
முன்மொழியும்
புத்திரர்களாக
நாம் மாறிவிடுவோம்.

எமக்குள் நாமே
எரிமலையாகுவோம்....