Saturday, October 2, 2010

ஈரமான தீ

சும்மா இருந்தவனை
உசுப் பேற்றிய
உன் கண்கள்


உன் சுவாசக்காற்றால்
பட படத்துக்
கிழியும்
நாள் காட்டியாய்
நான்

அழகிய
நட்சத்திரக் குவியலில்
பீச்சியடிக்கும்
மின்மினியாய்
நீ


அந்த மின்மினியின்
அழகில்
மயங்கித்தொலைத்தவனாய்
நான்


நீ ஈரமான தீ
அதில்
நான் மட்டுமே
குளிர் காய்கிறேன்


போர்கால வீரனுக்கும்
உட்சாகம் தரும்
தன் காதலியின் நினைவுகள்


ஒன்றுமிலாதவனைக் கூட
உயரம் தொடவைக்கும்
காதல் எண்ணங்கள்


தூக்கமில்லாத‌ இரவுகள்
கொடுத்த வல்லமை
உனக்கு எப்படி வாய்த்தது?


மின்சாரம் அறுந்ததும்
தீப்பெட்டி தேடும்
மனநிலைதான்
உன்னை நான் காணாத‌ போது .


இப்படியெல்லாம்
எப்படித்தான் பொய்யாக
எழுத முடிகிறது ?

No comments:

Post a Comment