Friday, October 1, 2010

அட்சய பாத்திரம்

ஓர் இரவு
ஓர் கனவு
ஒர்
உயர்ந்த நதியை
நான் சுமக்கிறேன்
வாழ்க்கையின்
புதிய
வாசல்கள்
எனக்காக
திறந்திருக்கிறது
நான்
வாழ்வை
ஒரு விளையாட்டாகவே
பார்த்து பழகி விட்டேன்
திறந்த பொக்கிசம்
இந்த
உலகம்
என்ன இல்லை
இதில்
அள்ளிக்கொள்ள‌
இந்த உலகை
வாழ சில சூட்சுமங்கள்
தெரிந்திருக்க வேண்டும்.
இது ஒரு
அட்சய பாத்திரம் .
இது ஒரு
அடர்ந்த
தங்கச் சுரங்கம்.
கடலுக்குள்
முத்துக்குளிப்பவனுக்குள்ள
அனுபவம்
வாழ்க்கையை
வசப்படுத்துபவனுக்கும்
வேண்டும்

No comments:

Post a Comment