Tuesday, January 11, 2011

ஜாமியா

சங்கீதச் சிரிப்பாய் அலைகளின் விளையாட்டுக்களிலும் , தென்றலின் வருடலிலும் இளம் வெயிலின் காய்தலிலும்
இந்த பேருவளை வீறு கொண்டு நிற்கிறது

அதற்கு அழகு சேர்க்கவும் பெறுமை சேர்க்கவும் ஜாமியா

ஓர் அறிவுக்கனிமரமாய் திக்கெட்டும் அறிவுச் சுடர் பரப்பும் ஒளி விளக்காய் ஜாமியா

மாணவர்களின் உயர்ச்சிக்கு வித்தாகவும், எமது முஸ்லிம் சமூகத்தின் சொத்தாகவும் ஓர் உயர்ந்த இலக்கை
நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது ஜாமியா

இது ஓர் அமுத சுரப்பி
இது ஓர் ஆழமரம்
இது ஓர் அட்சயபாத்திரம்

இது ஓர் வரலாறு
ஒரு சமூகத்தை புடம் போட்டு வளர்த்த ஓர் தாய்

வானத்தை முட்டும் அளவு இதன் புகழ் பரவவேண்டும்
வரலாறு நெடுகிழும் இதன் புகழ் ஓங்கிப் பாடப்பட வேண்டும்

எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகளை இது கர்ப்பம் தரித்திருக்கின்றன‌

No comments:

Post a Comment